பக்கங்கள்

ஞாயிறு, 8 நவம்பர், 2015

வீ.குமரேசன் வங்கிப் பணி நிறைவு நன்றி விழா


பணி நிறைவு நன்றி தெரிவிக்கும் விழாவில், வீ.குமரேசன் அவர்கள் ரூ.25 ஆயிரத்தை பெரியார் உலகத்திற்கு மகிழ்வோடு தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முன்னாள் இயக்குநர் நமச்சிவாயம் (சென்னை, 25.6.2015)
சென்னை, ஜூன் 27_ இந்தியன் ஓவர்சீஸ்  வங்கிப் பணியிலிருந்து பணி நிறைவு பெறும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவ லர்கள் சங்கத்தின் இணைப் பொதுச்செயலா ளர், பகுத்தறிவாளர் கழ கப் பொதுச்செயலாளர் வீ.குமரேசன் அவர்களு டைய வாழ்வில், கல்வி மற்றும் பல்வேறு அரசுப் பணிகள் மற்றும் வங்கிப் பணிகளில் முன்னோடி களாக, வழிகாட்டிகளாக உதவியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் 25.6.2015 அன்று மாலை நடைபெற்றது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலர்கள் சங் கத்தின் இணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவா ளர் கழகப் பொதுச்செய லாளர் வீ.குமரேசன் அனைவரையும் வர வேற்று நன்றி மற்றும் ஏற்புரை ஆற்றினார். அவர் தம்முடைய உரை யில், தம்முடைய வாழ்வில் உதவிய அனைவர் குறித் தும் சிறு குறிப்புரையை வழங்கி அனைவருக்கும் தம் நன்றியறிதலைத் தெரி வித்துக்கொண்டார்.
பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர், பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முன்னிலை யேற்று, விழா நாயகர் வீ.குமரேசனுக்கு பயனாடை அணிவித்து இயக்க வெளியீடுகளை அளித்து பாராட்டி சிறப் புரையாற்றினார். ஆசிரியர் அவர்களுக்கு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் முரளிசவுந்தர்ராவ் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் ஆனந்தகுமார் ஆகியோர் பயனாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கினார்கள்.
விழாவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேனாள் செயல் இயக்குநர் நமச் சிவாயம், விழா மலரை வெளியிட்டு பாராட்டுரை ஆற்றினார். அவருக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி யின் சார்பில் சிறீனிவாசன், ஆனந்த குமார் ஆகி யோர் பயனாடை அணி வித்து நினைவுப்பரிசை வழங்கினார்கள். விழா மலரை இந்தியன் ஓவர் சீஸ் வங்கியைச் சேர்ந்த விஜயசேனன், மணி ஆகி யோர் பெற்றுக்கொண்டனர்.
தேனி நாடார் சரசு வதி மேல்நிலைப்பள்ளி யின் மேனாள் அறிவியல் ஆசிரியர் எம்.பாலு, தமிழ் நாடு அரசின் வேளாண் மைத் துறை மேனாள் துணை இயக்குநர் என். ஹுபர்ட் ராபின்சன், தமிழ்நாடு அரசு வேளாண் மைத்துறை மேனாள் கூடு தல் இயக்குநர் முனைவர் கே.எம்.இராமானுஜம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி யின் மேனாள் உதவிப் பொது மேலாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலர்கள் சங்கத்தின் (தென்பகுதி) மேனாள் துணைத் தலைவர் முனைவர் ஆர்.சங்கரநாராயணன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலர்கள் சங் கத்தின் மேனாள் பொதுச் செயலாளர் ஏஅய்பிபி ஏஆர்சி (AIBPARC) தலை வர் தோழர் கே.வி.ஆச் சார்யா, இந்தியன் ஓவர் சீஸ் வங்கி அலுவலர்கள் சங்கத்தின் மேனாள் தலைவர், ஏஅய்பிபிஏ ஆர்சி (AIBPARC) பொதுச் செயலாளர் தோழர் எம்.ஆர்.கோபிநாதராவ், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலர்கள் சங்கப் பொதுச்செயலாளர், அனைத்திந்திய வங்கி அலுவலர்கள் அமைப் பின் மூத்த துணைத் தலை வர் தோழர் கே.ஆனந்தக் குமார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலர்கள் சங்கத் தலைவர், அனைத் திந்திய வங்கி அலுவலர்கள் அமைப்பின் இணைப் பொதுச்செயலாளர் முனைவர் ஜெ.டி.சர்மா ஆகி யோர் விழாவில் பங் கேற்று பாராட்டுரை ஆற் றினார்கள். அனைவருக் கும் பயனாடை அணிவிக்கப்பட்டு, நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
-விடுதலை,27.6.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக