பக்கங்கள்

ஞாயிறு, 29 நவம்பர், 2015

MARRIAGE REGISTRATION PROCEDURE


Following details/documents are required:-
1. Application for Registration of Marriage
2. Marriage Receipt with couple’s photo
3. Age Proof
4. Residence Proof
5. Witness ID proof
6. 4 passport size photos for each
7. Passport Number
8. Full Name, Religion, Caste, age, occupation and address of parents of husband and wife
9. Certificate for performance of marriage ceremony
Note:- 1. Three witnesses should accompanying the husband and wife to the Registrars office preferably between 11.30 a.m. and 01.30 p.m.
2. Parties may have to wait at least one hour at the Registrar office.
3. All the above documents should be notarized.
4. Application for Registration of marriage is available in the lawyer’s office.
5. Marriage Registration Certificate under Tamil Nadu Marriages Act and Hindu Marriage Act can be obtained from the Lawyer’s office after seven days from the date of Registration.
6. Parties should specify how many copies of marriage registration certificate they require.

வெள்ளி, 27 நவம்பர், 2015

Torch-bearer of reform - K. Veeramani



Torch-bearer of reform

K. Veeramani
November 19, 2015
MISSION INCOMPLETE
In the centennial year of the Justice Party, its service to the downtrodden and its objectives to strive for an egalitarian society need a fair appraisal
It is indeed remarkable that 2015, a year that witnessed much of a ballyhoo against reservation, is also historic for the Justice Party, an organisation that sowed the seeds of social justice in the socio-political conscience of the country. It now quietly marks its centennial (1916-2015).

What the Justice Party sowed a century ago has grown into a mighty banyan tree called caste-based reservation which the elite, the erudite and the privileged now want to be axed. However, at the grass-root level, and away from the cacophony of television debates, reservation as an idea still finds resonance, especially among the underprivileged.

The results of the Bihar elections have only reinforced this; the right wing’s call for a review of the reservation system was one of the reasons that did the Bharatiya Janata Party in.
The South Indian Liberal Federation, also referred to as the Justice Party, may be alien to the present day generation. It is a slice of history that has been conveniently or rather deliberately forgotten about in present day political discourse which glosses over the social reforms initiated by the party. How many thinkers and intellectuals who swear by democracy know that the Justice Party was a progressive movement that introduced women suffrage in April 1921 in the then Madras province? And this just a year after the princely state in Kerala?

How many of those who fight for women’s rights now are aware that the Devadasi system was abolished by the Justice Party government, which was formed in 1920? A political party in the opposition was so vociferously opposed to this idea that its distinguished members indulged in a war of words with the social reformer, women’s rights activist and writer, Dr. Muthulakshmi Reddy, in the Legislative Council. But the brave lady and a firm Justice Party had the last word.

First steps towards change
The party, which devoted itself to the upliftment of women and the marginalised, was formally launched on November 20, 1916, in Chennai. Its three founders were Dr. T.M. Nair, P. Theagaraya Chettiar and Dr. C. Natesa Mudaliar. After winning the first direct elections held in the Madras Presidency, it initiated several egalitarian moves like issuing a government order for the public utility of water from ponds and wells. Till then certain sections, like Adi Dravidars, were denied access to public water sources.

The Justice Party government formed an admission council to regulate admission to colleges, putting an end to seats being cornered only by upper caste candidates. In retrospect, it was a move that enshrined meritocracy and democratised the admission process. In the field of medical education, the government also took full control of the Medical Department, which until then was under the control of the British; it did this by appointing Indians.

The government took medical education to the common man by striking off the criterion of “knowledge of Sanskrit” from the conditions of eligibility. As a vast majority of the population hardly had the opportunity to learn even basic Sanskrit, they were shut out of medical colleges despite being talented and educationally accomplished. The dichotomy was removed by the Justice Party, which opposition party leader Sathyamurthy thought was buried “500 feet under the ground” when it faced an electoral debacle.

The Justice Party sprouted roots again in 1967 in the form of the Dravida Munnetra Kazhagam (DMK) and after the electoral mandate to rule the State. When DMK leader and Chief Minister C.N. Annadurai was asked how the party managed to win an election within 10 years after it decided to contest polls, he told the reporter that the DMK’s victory was just a continuation of the Justice Party’s victory; to him, the Justice Party was “his grandfather’s party”.

Contemporary relevance
Though history might record the Justice Party as having wound up in 1944, the fact is that it continues to live on as a movement upholding social justice. Over the years, the ideals for which it stood for continue to enchant leaders across the political spectrum. These ideals were what paved the way for the Central government to implement the Mandal Commission’s recommendations.

As opportunities grow for the downtrodden as a result of the reservation system, we need to look at history afresh. The first order, then known as the communal GO on reservation, was issued by the Justice Party government, even though the British had earlier identified that most jobs in government were going to certain castes. It was the Justice Party that first thought about distributing jobs among various castes. Despite its short stint, it worked towards the development of various marginalised sections, offering them a plethora of grants and aid that are too exhaustive to list.

Being active at a time when the mainstream media was more hostile to its ideology than now, the South Indian Liberal Federation ran its own English newspaper called The Justice. It had other publications too. Politically, it did not wind up but underwent a change in nomenclature. But this caused many of its detractors to write it off. It evolved into the Dravidar Kazhagam (DK) after Periyar E.V. Ramasamy took charge in 1944. Of course, he took the DK on a new course, enlisting the masses and making it a relevant movement. But the predecessor to the Justice Party went by the name Madras Dravidian Association, which played a historic role in the education of children from marginalised communities.

The Madras Dravidian Association, which was started by Dr. Natesa Mudaliar, ran a Dravidian home, which was a hostel for students from marginalised communities who came to the city to pursue higher education.
In the centennial year of the Justice Party, its service to the downtrodden and its objectives to strive for an egalitarian society need a fair appraisal. Its stellar role should be recorded for posterity. Its mission is still not complete and its principles have more powerful detractors now than when it was formed.

(K. Veeramani is the President of the Dravidar Kazhagam.)
‘The Hindu’ 19.11.2015
சீர்திருத்தத்திற்கான வழிகாட்டியின் முடிவற்ற பயணம்
கி. வீரமணி
இடஒதுக்கீட்டு நடைமுறையின் மீது ஒரு தாக்குதல் மேற்கொள்ளப் பட்ட  2015 ஆம் ஆண்டு ஒரு வகை யில் குறிப்பிடத்தக்க ஆண்டாக அமைந்திருப்பதுடன்,  நாட்டின் சமூக அரசியல் உணர்வில் சமூக நீதிக்கான விதைகளை விதைத்த ஓர் அமைப் பான நீதிக்கட்சிக்கும், அதன் நூற் றாண்டு விழாவைக் குறிக்கும்  வர லாற்றுச் சிறப்பு மிக்க ஆண்டாகவும் அமைந்திருக்கிறது.
நூறாண்டுகளுக்கு முன்னர் நீதிக் கட்சியால் விதைக்கப்பட்டு, இன்று பெரிய ஆலமரமாக வளர்ந்திருக்கும் ஜாதிவாரியான இடஒதுக்கீட்டு நடை முறையை, மேல்தட்டு மக்களும், கற்றறிந்தவர்களும், வாய்ப்பு வசதி பெற்றவர்களும் அழித்தொழிக்க விரும்புகின்றனர். ஆனாலும், ஆணி வேர் அளவிலும், தொலைக்காட்சி விவாதங்களின் பேரிரைச்சலைக் கடந்தும், இடஒதுக்கீடு என்பது இன்றும், மக்களிடையே, குறிப்பாக வாய்ப்பு மறுக்கப்பட்ட,  புறக்கணிக்கப் பட்ட மக்களிடையே இடம் பெற்றிருக் கும் உணர்வு பூர்வமான ஒரு கருத் தாகும். பிகார் மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இதனை மீண்டும் வலியுறுத் தியுள்ளன. இடஒதுக்கீட்டு நடைமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற வலதுசாரிகளின் பேச்சும் பா.ஜ.கட்சியின் தோல்விக் கான காரணங்களில் ஒன்றாகும்.

நீதிக் கட்சி என்று குறிப்பிடப்பட்ட தென்னிந்திய நல உரிமைக் கூட்ட மைப்பு பற்றி, இன்றைய தலைமுறை யினர் வேண்டுமானால் அறியாதவர் களாக இருக்கலாம். அக்கட்சியினால் தொடங்கப்பட்ட சமூக சீர்திருத்தங் களைப் பற்றி அலட்சியப்படுத்தும் இன்றைய அரசியல் பரப்புரையில், வரலாற்றின் ஒரு பகுதியாக விளங்கும் இக்கட்சியின் சாதனைகள் சவுகரிய மாகவோ அல்லது வேண்டுமென்றோ மறக்கப்பட்டுவிட்டன. அன்றைய சென்னை மாகாணத்தில் 1921 ஆம் ஆண்டில் பெண்களுக்கான வாக்குரி மையை முதன் முதலாக அறிமுகப் படுத்திய முன்னேற்றக் கருத்துகள் கொண்ட ஓர் இயக்கம்தான் இந்த நீதிக்கட்சி என்பதை இன்று மக்களாட் சியின் மாண்பைப் பற்றி வாய்கிழியப் பேசும் எத்தனை சிந்தனையாளர் களும், அறிஞர்களும் அறிந்திருக் கிறார்கள்? இது கேரள சமஸ்தானத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டுக்குப் பின் நடைபெற்றதாகும். 1920 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நீதிக் கட்சி ஆட்சியினால்தான் தேவதாசி நடை முறை ஒழிக்கப்பட்டது என்பதை இன்று பெண்கள் உரிமைக்காகப் போராடும் எத்தனை பேர் அறிந்திருக் கிறார்கள்?  தேவதாசி ஒழிப்பை முழு மூச்சாக எதிர்த்த ஓர் அரசியல் கட்சியின் உறுப்பினர்கள், சமூக சீர் திருத்தவாதியும் பெண்கள் உரிமைப் போராளியும், எழுத்தாளருமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியுடன் சட்டமன்ற மேலவையில் ஒரு சொற் போரே நடத்தினர். ஆனால் துணிவு மிகுந்த அந்த அம்மையாரும்,  உறுதி யாக நின்ற நீதிக்கட்சியும் இறுதியில் வெற்றி பெற்றனர்.

பெண்கள் மற்றும் புறக்கணிக்கப் பட்டவர்களின் மேம்பாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட இந்தக் கட்சி 1916 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 20 ஆம் நாளன்று முறைப்படி சென்னையில் தொடங்கப் பட்டது. அதனை உருவாக்கிய மும்மூர்த்திகள் டாக்டர் டி.எம்.நாயர், பி.தியாகராய செட்டியார் மற்றும் டாக்டர் சி. நடேச முதலியார் ஆவர்.  சென்னை மாகாணத்தில் நடைபெற்ற முதல் நேரடித் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, இக்கட்சி  குளங்கள், கிணறுகளில் உள்ள தண்ணீரைப் பொது மக்கள் பயன்படுத்துவது பற்றிய அரசாணையை வெளியிட்டது போன்ற பல சமத்துவ நடவடிக்கை களை மேற்கொண்டது. அதுவரை, ஆதிதிராவிட மக்கள் போன்ற சில பிரிவு மக்களுக்கு பொது நீர்நிலை களில் இருந்து நீர் எடுத்துப் பயன்படுத் தும் உரிமை மறுக்கப்பட்டு இருந்தது.

கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கையில் பெரும்பான்மையான இடங்களை ஒரு சில உயர்ஜாதியினர் மட்டுமே பெறுவது என்ற வழக்கத் திற்கு முடிவு கட்டும் வகையில், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை முறைப்படுத்த ஒரு சேர்க்கைக் குழுவை நீதிக்கட்சி அரசு உருவாக்கியது. கல்வி நிறுவன மாணவர் சேர்க்கை நடை முறையை தகுதி மற்றும் மக்களாட்சி அடிப்படையிலானதாக முன்தேதி யிட்டு ஆக்கும் ஒரு செயலாக அது அமைந்தது வரலாற்றில் பொன்னெழுத் துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தாகும். மருத்துவக் கல்வித் துறையில்,  அதுவரை ஆங்கிலேயரின் கட்டுப் பாட்டில் இருந்து வந்த மருத்துவத் துறையின் முழுக் கட்டுப்பாட்டையும் நீதிக்கட்சி அரசு எடுத்துக் கொண்டு, இந்தியர்களை அத்துறைக்கு பொறுப் பாளர்களாக நியமித்தது.

மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு சமஸ்கிருத மொழி அறிவு தேவை என்ற நிபந்தனையை நீக்கியதன் மூலம், மருத் துவக் கல்வி பெறும் வசதியை பாமர மக் களுக்கும் நீதிக்கட்சி கொண்டு சேர்த்தது. அடிப்படை சமஸ்கிருத மொழியைக் கூட கற்கும் வாய்ப்பு பெரும்பான்மையான மக்களுக்கு அளிக்கப்படாத நிலையில், கல்வி மற்றும் இதர தகுதிகளைப் பெற்றி ருந்தபோதிலும் மருத்துவக் கல்லூரிக் கதவுகள் அதுவரை அவர்களுக்கு மூடப் பட்டே இருந்தன. இந்த அநீதி, நீதிக்கட்சி யால் நீக்கப்பட்டது. எதிர்கட்சி, தேர்தலில் தோல்வியை எதிர் கொள்ள நேர்ந்த போது, 500 அடி ஆழக் குழியில் புதைக்கப் பட்டதாகவே இதனை எதிர்கட்சித் தலைவர் சத்யமூர்த்தி நினைத்தார்.

மாநிலத்தில் ஆட்சி செய்யும் வாய்ப்பு கிடைத்தபோது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வடிவத்தில் நீதிக்கட்சி 1967 இல் மறுபடியும் துளிர்விட்டது. தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவு செய்த 10 ஆண்டுகளுக்குள் எவ்வாறு தேர்தலில் வெற்றி பெறமுடிந்தது என்று தி.மு.க. தலைவர் சி.என்.அண்ணாதுரையிடம் கேட்கப்பட்டபொழுது,  நீதிக்கட்சியின் வெற்றியைத் தொடர்ந்ததுதான் தி.மு.க. வின் வெற்றியும் என்று அவர் பதிலளித் தார். அவரைப் பொறுத்த அளவில் நீதிக்கட்சி அவரது தாத்தாவின் கட்சி.

1944 ஆம் ஆண்டில் நீதிக்கட்சி கலைக்கப்பட்டது  என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், சமூக நீதியை நிலைநாட்டும் ஓர் இயக்கமாக அது தொடர்ந்து இருந்து கொண்டுதான் வருகிறது என்பதுதான் உண்மையாகும். அரசியல் எல்லைகளைக் கடந்தும் தலைவர்களைக் கவர்வதாகவே அதன் கொள்கைகள் தொடர்ந்து பல ஆண்டு காலமாக இருந்து வருகின்றன. இத்தகைய கருத்துகள்தான், மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை மத்திய அரசு நடை முறைப்படுத்துவதற்கான வழியை வகுத்தன.

இடஒதுக்கீட்டு நடைமுறையின் விளைவாக, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வாய்ப்புகள் பெருகி வந்தன என்ற நிலையில் வரலாற்றை நாம் புதியதாகக் காணவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான அரசுப் பணிகளில் ஒரு சில உயர் ஜாதியினரே இடம் பெற்றிருந் தனர் என்பதை  ஆங்கிலேயரும் முன்ன தாக உணர்ந்திருந்தனர் என்ற போதிலும், இடஒதுக்கீடு பற்றிய முதல் ஆணை,  ஜாதிவாரியான இடஒதுக்கீட்டு அரசாணை என்று அறியப்பட்டது, நீதிக்கட்சி அரசால் பிறப்பிக்கப்பட்டது.  பணியிடங்களை பல்வேறுபட்ட ஜாதியினரிடையே பகிர்ந்து அளிக்கவேண்டும்  என்று முதன் முதலாக நினைத்ததே நீதிக்கட்சிதான். குறுகிய காலம் மட்டிலுமே அந்தக் கட்சி ஆட் சியில் இருந்தபோதிலும்,  பல்வேறுபட்ட ஒடுக்கப்பட்ட பிரிவு மக்களின் நலன் களுக்காக, முன்னேற்றத்திற்காக அக்கட்சி அரசு மேற்கொண்ட எண்ணற்ற  திட்டங் களும், அளித்த மானியங்களும் பட்டிய லிட இயலாத அளவுக்கு பரந்துபட்டவை யாகும்.

இப்போது இருப்பதை விட அதன் கோட்பாடுகளுக்கு எதிராக பெரும் பாலான ஊடகத்தினர் இருந்த ஒரு காலகட்டத்தில், தீவிரமாக செயல்பட்டு வந்த தென்னிந்திய நல உரிமை கூட் டமைப்பு, ஜஸ்டிஸ் என்ற தனது சொந்த ஆங்கில செய்தியிதழையும் நடத்தி வந்தது. வேறு பல நூல்களையும், இதழ் களையும் அது வெளியிட்டு வந்தது.  அரசியல் ரீதியாக அந்த அமைப்பும் கட்சியும் முடிவுக்கு வந்துவிடவில்லை. அதன் பெயரில் மட்டுமே ஒரு மாற்றத்தை அது பெற்றது. அது அதன் பல எதிர்ப்பாளர்களையும், அது அழிந்தே போனது என்றே எண்ணச் செய்தது. 1944 ஆம் ஆண்டில் நீதிக்கட்சியின் தலை மைப் பொறுப்பை பெரியார் ஈ.வெ.ராம சாமி அவர்கள் ஏற்றபோது, அது திராவிடர் கழகமாக உருவெடுத்தது. பொது மக்களின் ஆதரவைத் திரட்டி, பொதுமக்களின் நலன்களுக்காகப் பாடுபடும் ஓர் இயக்க மாக, திராவிடர் கழகத்தை பெரியார் ஒரு புதிய பாதையில் கொண்டு சென்றார். ஆனால் நீதிக்கட்சிக்கும் முன்னோடியாக இருந்த சென்னை திராவிடர் சங்கம், ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் கல்வி வளர்ச்சியில் வரலாற்றுச் சிறப்பு மிகுந்த ஒரு பங்கினை ஆற்றியுள்ளது.

டாக்டர் நடேச முதலியார் அவர் களால் தொடங்கப்பட்ட சென்னை திராவிடர் சங்கம், சென்னையில் திராவிடர் இல்லம் ஒன்றை நடத்தி வந்தது. உயர்கல்வி பயில்வதற்காக, சென்னைக்கு வந்த, ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் குழந்தைகளுக்கான தங்கும் விடுதியாக அந்த இல்லம் பயன்பட்டது.

நீதிக்கட்சியின் நூற்றாண்டு விழாவின் போது,  ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூக மக்களுக் காக அது ஆற்றிய சேவைகளையும், சமதர்ம சமுதாயம் ஒன்றை நிறுவுவதற்கு அது மேற்கொண்ட இலக்குகளையும் நியாயமானதொரு முறையில் பரிசீலனை செய்து பார்க்கவேண்டும். நமது வருங்கால சந்ததியினர் அதன் சிறப்பு மிகுந்த பங் களிப்புகளை அறிந்து கொள்ளச் செய்யும் வகையில் அவை பதிவு செய்யப்பட வேண்டும்.  அதன் பயண நோக்கம் இன்ன மும் முழுமை அடையவில்லை. அதன் கொள்கைகள் உருவாக்கப்பட்ட போது அதற்கு இருந்த எதிர்ப்புகளை விட இப்போது அதிகாரமும் செல்வாக்கும் மிகுந்த எதிர்ப்பாளர்கள் அதிகமாக உள்ளனர்.

நன்றி: ‘தி ஹிந்து’  19-11-2015
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்
-விடுதலை,20.11.15

ஞாயிறு, 8 நவம்பர், 2015

வீ.குமரேசன் வங்கிப் பணி நிறைவு நன்றி விழா


பணி நிறைவு நன்றி தெரிவிக்கும் விழாவில், வீ.குமரேசன் அவர்கள் ரூ.25 ஆயிரத்தை பெரியார் உலகத்திற்கு மகிழ்வோடு தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முன்னாள் இயக்குநர் நமச்சிவாயம் (சென்னை, 25.6.2015)
சென்னை, ஜூன் 27_ இந்தியன் ஓவர்சீஸ்  வங்கிப் பணியிலிருந்து பணி நிறைவு பெறும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவ லர்கள் சங்கத்தின் இணைப் பொதுச்செயலா ளர், பகுத்தறிவாளர் கழ கப் பொதுச்செயலாளர் வீ.குமரேசன் அவர்களு டைய வாழ்வில், கல்வி மற்றும் பல்வேறு அரசுப் பணிகள் மற்றும் வங்கிப் பணிகளில் முன்னோடி களாக, வழிகாட்டிகளாக உதவியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் 25.6.2015 அன்று மாலை நடைபெற்றது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலர்கள் சங் கத்தின் இணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவா ளர் கழகப் பொதுச்செய லாளர் வீ.குமரேசன் அனைவரையும் வர வேற்று நன்றி மற்றும் ஏற்புரை ஆற்றினார். அவர் தம்முடைய உரை யில், தம்முடைய வாழ்வில் உதவிய அனைவர் குறித் தும் சிறு குறிப்புரையை வழங்கி அனைவருக்கும் தம் நன்றியறிதலைத் தெரி வித்துக்கொண்டார்.
பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர், பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முன்னிலை யேற்று, விழா நாயகர் வீ.குமரேசனுக்கு பயனாடை அணிவித்து இயக்க வெளியீடுகளை அளித்து பாராட்டி சிறப் புரையாற்றினார். ஆசிரியர் அவர்களுக்கு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் முரளிசவுந்தர்ராவ் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் ஆனந்தகுமார் ஆகியோர் பயனாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கினார்கள்.
விழாவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேனாள் செயல் இயக்குநர் நமச் சிவாயம், விழா மலரை வெளியிட்டு பாராட்டுரை ஆற்றினார். அவருக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி யின் சார்பில் சிறீனிவாசன், ஆனந்த குமார் ஆகி யோர் பயனாடை அணி வித்து நினைவுப்பரிசை வழங்கினார்கள். விழா மலரை இந்தியன் ஓவர் சீஸ் வங்கியைச் சேர்ந்த விஜயசேனன், மணி ஆகி யோர் பெற்றுக்கொண்டனர்.
தேனி நாடார் சரசு வதி மேல்நிலைப்பள்ளி யின் மேனாள் அறிவியல் ஆசிரியர் எம்.பாலு, தமிழ் நாடு அரசின் வேளாண் மைத் துறை மேனாள் துணை இயக்குநர் என். ஹுபர்ட் ராபின்சன், தமிழ்நாடு அரசு வேளாண் மைத்துறை மேனாள் கூடு தல் இயக்குநர் முனைவர் கே.எம்.இராமானுஜம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி யின் மேனாள் உதவிப் பொது மேலாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலர்கள் சங்கத்தின் (தென்பகுதி) மேனாள் துணைத் தலைவர் முனைவர் ஆர்.சங்கரநாராயணன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலர்கள் சங் கத்தின் மேனாள் பொதுச் செயலாளர் ஏஅய்பிபி ஏஆர்சி (AIBPARC) தலை வர் தோழர் கே.வி.ஆச் சார்யா, இந்தியன் ஓவர் சீஸ் வங்கி அலுவலர்கள் சங்கத்தின் மேனாள் தலைவர், ஏஅய்பிபிஏ ஆர்சி (AIBPARC) பொதுச் செயலாளர் தோழர் எம்.ஆர்.கோபிநாதராவ், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலர்கள் சங்கப் பொதுச்செயலாளர், அனைத்திந்திய வங்கி அலுவலர்கள் அமைப் பின் மூத்த துணைத் தலை வர் தோழர் கே.ஆனந்தக் குமார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலர்கள் சங்கத் தலைவர், அனைத் திந்திய வங்கி அலுவலர்கள் அமைப்பின் இணைப் பொதுச்செயலாளர் முனைவர் ஜெ.டி.சர்மா ஆகி யோர் விழாவில் பங் கேற்று பாராட்டுரை ஆற் றினார்கள். அனைவருக் கும் பயனாடை அணிவிக்கப்பட்டு, நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
-விடுதலை,27.6.15

சனி, 7 நவம்பர், 2015

ஜெர்மனியில் உலக பகுத்தறிவாளர்கள் மாநாடு

பெரியார் உலகமயமாகிறார்
பெரியாரிஸ்ட்டுகள் ஜெர்மனியில் கூடுவோம்!

உலக பகுத்தறிவாளர்கள் மாநாடு

தமிழர் தலைவர் அறிக்கை


2016 ஜூலையில் ஜெர்மனியில் நடைபெற விருக்கும் பெரியாரிஸ்டுகள் பகுத்தறிவாளர்கள் மாநாடு குறித்து தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
உலக பெரியாரிஸ்டுகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு; ஆம் எளிதில் கிடைக்காத அரியதோர் வாய்ப்புதான்!
பல ஆண்டுகளாக நாம் கனவு கண்டோம். சில ஆண்டுகளாக ஆழ்ந்து திட்டமிட்டோம். நம் அறிவு ஆசான் - உலகத் தலைவர் பெரியார் ஓர் ஒப்பற்ற பகுத்தறிவுப் பகலவன் என்பதை உலகத்திற்கு நாம் பறைசாற்றிட, பெரியார்தம் தத்துவங்களை பகுத்தறிவு, மானுடநேயம், பெண்ணுரிமை, மூடநம்பிக்கை ஒழிப்பு இவைகளை உலகறியச் செய்து, அவர்தம் சாதனை களை - அமைதிப் புரட்சியை அகிலம் அறியச்செய்ய ஓர் அரிய வாய்ப்பு.
ஆம் பெரியார் பன்னாட்டு அமைப்பும், பகுத்தறிவாளர்களும் இணைந்து நடத்தும் பெரியார் பன்னாட்டுறவு பகுத்தறிவாளர் மாநாடு ஜெர்மெனியில் வருகின்ற 2016 ஆண்டில் ஜூலை 28, 29, 30 ஆகிய மூன்று நாள்களில் பல்வேறு கருத் தரங்குகள் - கலைநிகழ்ச்சிகளுடன் ஜெர்மனியில் எல்லா ஏற்பாடுகளும் தொடங்கி நடைபெறுகின்றன.
ஜெர்மனி பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவரான பேராசிரியை டாக்டர் உல்ரிக் நிக்கலஸ் அம்மையார் அவர்கள் தலைமையில் அமைந்த உள்ளூர் குழுவும், பெரியார் பன்னாட்டு அமைப்பின் இருபெரும் ஆற்றல்மிகு இயக்குநர்கள் பேராசிரியர் டாக்டர் இலக்குவன் தமிழ், டாக்டர்  (மருத்துவர்) சோம.இளங்கோவன் - டாக்டர் சரோஜா அம்மை யார் போன்றவர்களும் இணைந்த வரவேற்புக்குழு வினர் தொடக்க கட்ட பணிகளைத் தொடங்கிவிட்டனர்.
அந்தப் பருவம் குளிர் இல்லாத கோடைப் பருவம்; வெளிநாடுகளிலிருந்து வந்து கலந்து கொள்பவர்களுக் குரிய அந்த தட்ப வெட்ப சூழ்நிலை மிகவும் வசதியாக இருக்கும்.
ரைன்நதி படகுப் பயணம் - இறுதி நாள் பொழுது போக்காகவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. வெளி நாட்டுப் பிரதிநிதிகள் - பேராளர்கள் விரும்பும் வண்ணம் மிதமான வாடகை ஓட்டல்களையும் - உள்ளூர் வரவேற்புக்குழுவினர் ஏற்பாடு செய்ய ஆயத்தமாக உள்ளனர்.
மூன்று நாள் மாநாடு ஜெர்மனியின் கொலோன் நகரில் நடந்த பிறகு ஊர் திரும்புமுன், ஒருவாரம் அல்லது 10 நாட்கள் அய்ரோப்பிய நாடுகளான சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், லண்டன் சென்று திரும்ப பேராளர்கள் விரும்பினால், அவர்கள் பிரபல பயணக் கம்பெனிகள் மூலம் (Package Tour)   அவர வர்கள் சொந்த செலவில் ஒட்டுமொத்த பகுத்தறிவா ளர்கள் குழு சுற்றுலாவாக அமைத்துக் கொண்டு தமிழகம் - சென்னை - திரும்பவும் ஏற்பாடு செய்ய யோசிக்கலாம்.
மாநாட்டில் கலந்து கொள்ளும் பேராளர்களுக்கு விமான பயணக்கட்டணம் அல்லாமல் எவ்வளவு கட்டணம் (தங்கும் ஓட்டல், மாநாட்டில் மதிய உணவு - இடையில் தேநீர் உட்பட ஆகும் தொகை) எவ்வளவு என்பது விரைவில் அறிவிக்கப்படும்.
அதிகபட்சம் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் (Delegates) 100 பேர்களையும், உள்ளூர்காரர்கள் 200, 300-க்கு மேல் எதிர்பார்க்கப்படுகின்றார்கள்.
100 பேர் First Cum First Served - முதலில் பதிவு செய்தவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் பதிவு செய்து பேராளர்கள் (Delegates) ஆக்கப்படுவர்.
இங்கே கணிசமானவர்கள் எண்ணிக்கை புறப் பட்டால் (Package Tour)   விமான டிக்கெட்டுகளில் விலை குறைய வாய்ப்பு இருக்கக்கூடும்.
இது சம்பந்தமாக பகுத்தறிவாளர் கழகப் பொறுப் பாளர்கள் வீ.குமரேசன் (ப.க.மாநில பொதுச் செய லாளர்), கோ.ஒளிவண்ணன், சென்னை தமிழ்ச் செல்வன், தருமபுரி ஊமை ஜெயராமன் ஆகியோர் குழுவினராக முதலில் தொடர்புக்கு செயல்படுவர்.
மற்ற விவரங்கள் அவ்வப்போது  வெளியிடப்படும்.
மாநாட்டின் தலைப்பு (Theme of the conference) கருத்தரங்க அமைப்புகள், ஆய்வுக் கட்டுரையாளர்கள் - மலர் தயாரிப்பு இப்படிப் பலப்பல பிறகு அவ்வப் போது அறிவிக்கப்படலாம்.


கி.வீரமணி
புரவலர், பகுத்தறிவாளர் கழகம்
-விடுதலை,13.7.15

ஞாயிறு, 1 நவம்பர், 2015

' The Modern rationalist readers circle ' inauguration ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் வாசகர் வட்டம்’ தொடக்கவிழா


பகுத்தறிவு, நாத்திகம், மனிதநேயம் ஆகியவற்றுக்காக வெளிவரக்கூடிய ஒரே ஆங்கில ஏடு ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’
ஆங்கில மாத இதழ் ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் வாசகர் வட்டம்’ தொடக்கவிழாவில் தமிழர் தலைவர்
சென்னை, அக்.18_ சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் நேற்று (17.10.2015) மாலை தென்சென்னை  மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் டாக்டர் எஸ்.டி.இரத்தினசபாபதி தலைமையில் ஆங்கில மாத இதழ் ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் வாசகர் வட்டம்’ தொடக்கவிழா நடைபெற்றது.
பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்புச் செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன் வரவேற்றார். தொடக்க விழாவில் பேசிய அனைவர் உரையும் ஆங்கிலத்தில் அமைந்தது.
பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன் ’அபாயத்துக்குள்ளாகியுள்ள  குடிமக்களின் உரிமைகள், கருத்து சுதந்திரம்’ எனும் தலைப்பில் உரையாற்றினார்.
1971 ஆம் ஆண்டு தந்தை பெரியாரால் தொடங் கப்பட்ட ஆங்கில மாத இதழ் ’தி மாடர்ன் ரேஷன லிஸ்ட்’ இதழ் ஆங்கிலத்தில் பகுத்தறிவு பரப்பும் பணியை இடையறாது செயல்படுத்தி வருகிறது.  ’ரேஷனலிஸ்ட் வாசகர் வட்டம்’ எனும் அமைப்பு தொடக்க விழாவில், வாசகர் கருத்து பரிமாற்றம் மற்றும் விவாதத்தை பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் வீ.குமரேசன் ஒருங் கிணைத்தார்.
மேலும், ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ அக்டோபர் மாத இதழைத் திறனாய்வு செய்து விரிவாகப் பேசினார்.
கருத்துப் பரிமாற்றம் மற்றும் விவாதத்தில் பங்கேற்ற வாசகர்களின் கருத்துகளுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விரிவாக பதிலுரைத்தார்.
மானமிகு என்பதற்கு ஆங்கிலத்தில் ‘Self-Respectful’ எனும் சொல்லை பலத்த கரவொலிக் கிடையே அறிமுகப்படுத்தினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ இதழின் முதன்மை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றும்போது,
பகுத்தறிவு, நாத்திகம், மனிதநேயம் ஆகியவற்றுக் காக வெளிவரக்கூடிய ஒரே ஆங்கில ஏடு ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ என்று உள்ளது. இதில் பெருமைப் படவில்லை.
நம்முடைய அறிவு ஆசான் தந்தை பெரியார் தென்கிழக்காசியாவின் சாக்ரட்டீஸ், புத்துலகின் தொலைநோக்காளர் அவர்கள் சுய மரியாதை, சமூகநீதி, பகுத்தறிவு ஆகியவைகளை பரப்புவதற்காக 87 ஆண்டுகளுக்கு முன்பாக நாமெல்லாம் பிறக்காத 1928 ஆம் ஆண்டில் ‘ரிவோல்ட்’ என்கிற ஆங்கில ஏட்டைத் தொடங் கினார்கள்.
தந்தை பெரியார் அவர்கள் முழுமையாக எதையும் பயன்படுத்திக் கொள்பவர்; அந்த வகையில் ஆங்கில ஏடான ‘ரிவோல்ட்’ மூலமாக சுயமரியாதை, பகுத்தறிவு கருத்துகளைப் பரப்புவதற்குப் பயன் படுத்திக்கொண்டார்.
’ஸ்பெல் செக்’ போன்ற வசதிகள்
அப்போது கிடையாது
கடைசிவரை பகுத்தறிவுவாதியாக இருந்தவரான எஸ்.ராமநாதன் அவர்கள் ருஷ்யப் பயணத்தின்போது தந்தை பெரியாருடன் சென்றவர். அவர் ‘ரிவோல்ட்’ ஏட்டில் பணியாற்றினார். அடுத்து குத்தூசி குருசாமி பணியாற்றினார். படித்தவர்கள் எல்லாம் அயோக் கியர்களாக இருந்தார்கள். படிப்பறிவில்லாதவர்கள்  சொக்கத்தங்கமாக இருந்தார்கள். தந்தை பெரியார் நம்பிக்கையைப் பெற்றிருந்தார்கள்.
இப்போதுள்ள ’ஸ்பெல் செக்’ போன்ற வசதிகள் அப்போது கிடை யாது. எழுத்து கோர்ப்பவர்கள், பிழை திருத்து வோருக்கு அவ்வளவாக ஆங்கிலம் தெரியாது. அதற்குத் தந்தை பெரியார் அவர்கள் கூறும்போது, ‘ரிவோல்ட்’ ஏட்டினை வாசிப்பவர்கள் படித்த அறிவாளிகள், எழுத்தில் பிழை இருந்தால், திருத்திப் படித்துக்கொள்வார்கள் என்றார். இப்போது அப்படி இருக்க முடியாது.
பழைமைவாய்ந்த தேசிய கலாச்சாரம் என்றெல் லாம் கூறத் தொடங்கிவிட்டார்கள். ராமன் எந்த ஆங்கிலவழிப் பள்ளிக்கும் சென்றவன் அல்ல. ஆர்.எஸ்.எஸ். ஏடான ‘ஆர்கனைசரில்’ ’சித்தரிக்கப் படும் பகுத்தறிவுவாதம்’ என்றெல்லாம் குறிப்பிட்டு, பகுத்தறிவு  என்பது எப்போதும் உள்ளது என்றெல் லாம் பகுத்தறிவு குறித்து எழுதத் தொடங்கிவிட் டார்கள்.
இரக்கத்தைத் தெரிவிக்காத ‘ஆர்கனைசர்’ ஏடு நீதி, நியாயத்துக்குப் புறம்பாக கல்புர்கி கொல்லப்பட்டதை ஆதரித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். ஏடான ‘ஆர்கனைசரில்’ டாக்டர் அரிசங்கர் என்கிற கல்வியாளரைக் கொண்டு பகுத்தறிவு வாதங்களைத் திரித்து, திசை திருப்பி, முற்றிலும் பகுத்தறிவுக்கு புறம்பாக எழுதியுள்ளது. மெட்டீரியலிசம் என்பதி லேயே பாரதீய மெட்டீரியலிசம் என்று கூறுகிறார்கள்.
தந்தை பெரியார் மெட்டீரியலிசம் குறித்து விரிவாகக் குறிப்பிட்டு நூலை வெளியிட்டுள்ளார்கள். அனைவரும் படிக்க வேண்டிய நூல் அது.
சம்பூகனை ராமன் கொன்றதை யார் ஏற்பார்கள்? உத்தரகாண்டத்தில் சம்பூகவதம்குறித்து குறிப்பிட் டுள்ளார்கள்.  மண்டல் குழு அறிக்கையிலேயே சம்பூகன் குறித்து குறிப்பிட்டுள்ளார்கள்.
நீதிபதி சின்னப்ப ரெட்டி அவருடைய தீர்ப்புரை யில் குறிப்பிடும்போது, ஏகலைவன், துரோணர் காலம் முடிந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
பகுத்தறிவு என்பது பாரதத்தின் பழைமையானது என்று குறிப்பிடத் தொடங்கிவிட்டார்கள்.
திருக்குறளை, பகுத்தறிவை நாம் அவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மத, ஜாதி வேறுபாடுகள், மூடநம்பிக்கைகளை எதிர்த்தவரான கவுதம புத்தரையே 9 ஆவது அவதாரம் என்று கூறுகிறார்கள்.
ராமன் கதாபாத்திரங்கள் குறித்து தந்தை பெரியார் நூல் எழுதி வெளியிட்டபோது, இலட்சக்கணக் கிலான பிரதிகள் விற்பனையாகி பரவியபோது, ‘கல்கி’யில் ராஜகோபாலாச்சாரியார் ’சக்கரவர்த்தி திருமகன்’ என்று தொடர் எழுதி, பின்னர் நூலாக வெளியாகி அந்த நூலும் ஏராளமாக விற்பனை ஆனது.
அவர் அந்த நூலில் குறிப்பிடும்போது, ராமன் ஏன் நேரிடையாக வாலியை கொல்லாமல் மறைந் திருந்து கொன்றான்? என்று கூறி, இதில் வாலி வதம்குறித்து விவாதிக்க விரும்பவில்லை என்பதால் வாசகர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று அதை அப்படியே விட்டுவிட்டார்.
ராமனைப் போலவே, ராஜபக்சேவும். அவர்கள் செய்த கொலை களை யாரும் பொறுத்துக்கொள்ள முடியாது. பெண் கேலிவதை என்றால் முதல் குற்றவாளி கிருஷ்ணன் தான்.
பகுத்தறிவைப் பரப்புவதில்தான்...
அமெரிக்கப் பேராசிரியர் ஜோஷி குறிப்பிட் டுள்ளவாறு, நம்முடைய எதிரிகள் முதலில் பாராட் டுவார்கள், பின்னர் ஏற்றுக்கொள்வதாகக் கூறி, பின்னர் முழுமையாக செரிமானம் செய்து அழித்து விடுவார்கள். அதுபோன்று திருக்குறளை காப் பாற்றவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்போது பகுத்தறிவு (ரேஷனலிசம்) என்பதையும் காப்பாற்ற வேண்டிய நிலையை ஏற்படுத்த முனைந்துள்ளார்கள்.
பகுத்தறிவைப் பரப்புவதில்தான் நம்முடைய இதழான ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ பணியாற்றி வருகிறது.
அண்ணா பகுத்தறிவு குறித்து அண்ணமலைப் பல்கலைக்கழகத்தில் பேசுகையில் சுருக்கமாகக் கூறும்போது, சொல் வேறு; செயல் வேறு என்கிற இரட்டை நிலை இல்லாததுதான் பகுத்தறிவு என்று குறிப்பிட்டார். பகுத்தறிவு என்பது அறிவியலைப் புறந்தள்ளாததும், உண்மைக்கானதுமாகும்.
பெண்களுக்கு சம உரிமை, ஜாதிபாகுபாடுகள் களையப்பட வேண்டும். மனிதன் ஒரு சமூக விலங்கு.
பல நாடுகளிலும் வலியுறுத்தப்படுவது கருத்து சுதந்திரம்.
நம்முடைய அரசமைப்பு முகப்பில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் (LIBERTY, EQUALITY, FRATERNITY)வலியுறுத்தப்பட்டுள்ளது.
மதவாதிகள் கேள்வி கேட்பதை அனுமதிக்கமாட் டார்கள். பகுத்தறிவுவாதிகள் எதையும் ஏன்? என்று கேட்பவர்கள். அறிவியல் என்பதே எப்போதும் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளக்கூடியது. மனித உறவுகளை அழிக்கக்கூறுவது கீதை.
இதைக் கேட்டால், பகவான் அருளியது கீதை என்கிறார்கள்.  ஆகவே, ‘மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ வாசகர் வட்டத்தில்  பார்வையும், பணியும் மிகவும் முக்கியமானது. ஆங்கிலம் அறிந்த அனைவருக்கும் இச்செய்தியை கொண்டு செல்லவேண்டும். படிக்க வேண்டியது எது? படிக்கக்கூடாதது எது? என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்.
இவ் வாறு பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர், ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ முதன்மை ஆசிரியர் பேசுகையில் குறிப்பிட்டார். அவர் உரையைத் தொடர்ந்து வாசகர்களுடன் கருத்து பரிமாற்றம், விவாதக்களம் நடைபெற்றது.
மருத்துவர் தேனருவி கேள்வியாக சமூக வலைத்தளங்களில் பகுத்தறிவு கருத்துகளைப் பரப்பும்போது ‘மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ கருத்துகள் தமிழ் தெரியாதவர்களுக்கும்  பயன்படுகிறது. இந்தியில் இதழ் வெளிவருமா? என்று கேட்டார்.
ஆசிரியர் பதிலுரையில் பெரியார் மணியம்மை பல்லைக்கழகத்தின் சார்பில் மொழிபெயர்ப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. ‘மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ இதழில் சில பக்கங்களில் இந்தியும் இணைந்து வர உள்ளது. ந.கதிரவன் கேள்வியாக மாண வர்களை கவர்ந்திடும்வண்ணம் ‘தி மாடர்ன் ரேஷன லிஸ்ட்’ இதழில் உரையாடல் பகுதி இடம் பெறுமா? என்று கேட்டார்.
ஆசிரியர் பதிலுரையில் மேலும் பல உள்ளடக் கங்களுடன் இதழ் வெளிவரும் என்று குறிப்பிட்டார்.
ஒரு நிறுவனத்தின் பொது மேலாளராக உள்ள வரான திருவேங்கடம் கேள்வியாக தந்தை பெரியார் ஆங்கிலத்தல் பேசியுள்ளாரா? என்று கேட்டார்.
ஆசிரியர் பதிலுரையில், தந்தை பெரியார் வட மாநில சுற்றுப் பயணங்களில் தந்தை பெரியாரின் செயலாளராக  நான் உடன் சென்றேன். கான்பூர், லக்னோ பல்கலைக்கழகத்தில் ஏராளமானவர்கள் முன்னிலையில் தந்தை பெரியார் ஆங்கிலத்தில் பேசினார். முதலில் அவர் தமிழில் பேசி, நான் ஆங்கிலத்தில் கூறி, பின்னர் மூன்றாவது நபர் இந்தியில் மொழி பெயர்த்துக் கூறிய நிலையில், தந்தை பெரியார் குற்றால அருவிபோல் பேசுபவர்.
ஆகவே, அவருக்கு சிரமமாக இருந்ததை அடுத்து, அவரே ஆங்கிலத்தில் பேச அடுத்தவர் இந்தியில் மொழி பெயர்த்தார். 1957_1958 ஆம் ஆண்டில் லக்னோ பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் தந்தை பெரியார் பேசினார்.
வித்தவுட் எனி ரீசன் என்பதற்குனு தமிழில் என்ன  என்று தந்தை பெரியார் கேட்ட போது எவ்வித ஒதுக்கீடும் இல்லாமல் என்று கூறியபோது, அவர் ஆங்கிலத்திலேயே வித்தவுட் எனி ரீசன் என்றே பேசினார்.
அண்ணா தம் மும்பை அனுபவத்தை அழகாக தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்டிருந்தபோது எங்களிடம் குறிப்பிட்ட சம்பவம் மிகவும் சுவாரசிய மானது. மும்பையில் எம்.என்ராய் அவருடைய இல்லத்தில் விருந்து.
அப்போது தந்தை பெரியாருக்கு தயிர் சோறு, ஊறுகாய் வைக்கப்பட்டிருந்தபோது, தயிர் சோற்றைவிட ஊறுகாய் அவரைக் கவர்ந்திருந்தது. ஊறுகாய் மேலும் வேண்டும் என்று கேட்கவேண்டிய பெரியாருக்கு ஊறுகாய் என்பதற்கு ஆங்கிலத்தில் பிக்கிள்ஸ் என்பது உடனடியாக நினைவுக்கு வரவில்லை.
அண்ணா இதைக்கண்டு எப்படி சமாளிக்கிறார் பார்ப் போம் என்று அமைதியாக கவனித்துக்கொண்டிருந்தார். எம்.என்.ராய்  என்ன வேண்டும் நாயக்கர்? என்று மிகுந்த அக்கறையுடன் கேட்டுக்கொண்டிருந்தார். இவர் ஊறுகாய் வைத்திருந்த இடத்தைக்காட்டினாலும், அவருக்கு புரியவில்லை. மிகவும் தவித்துப்போனவர், தன்னுடைய  நாக்கால் டொக்,டொக் என்று சுவை உணர்வை காட்டியபோது, ஓ, பிக்கிள்ஸ் என்று எடுத்து வந்து கொடுத்தார்கள்.
இச்சம்பவத்தை அண்£ கூறும்போது ஒரே கலகலப் பாக இருக்கும். என்று ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்ட போது, அன்னை மணியம்மையார் அரங்கமே கலகலப் பானது. தந்தை பெரியாரைப்பொறுத்தமட்டில் மொழி ஒரு தொடர்புக்கான கருவியே ஆகும் என்று ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தன்னு டைய கோரிக்கையாக மாணவர்கள், இளைஞர்களுடன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நேரடியாக கேள்விகளுக்கு பதில் அளிக்கும் நிகழ்¢வு வேண்டும் என்று கோரினார்.
கலந்துகொண்டவர்கள்
பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் நேரு, பச்சையப்பன் கல்லூரி மேனாள் முதல்வர் பேராசிரியர் அரங்கசாமி, வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோ.வி.கோபால், தமிழ்லெமுரியா இத ழாசிரியர் குமணராசன், மு.தருமராசன், மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னரெசு பெரியார், பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் கி.சத்திய நாராயணன், பொருளாளர் மனோகரன்,
பெரம்பூர் ஆசிரியர் சூரியன், பா.மணியம்மை, கொடுங்கையூர் தங்கமணி, தங்க. தனலட்சுமி, மருத்துவர் தேனருவி, பேராசிரியர் இசையமுது, சி.வெற்றிசெல்வி, ஆவடி மாவட்ட  பகுத்தறிவாளர் கழக செயலாளர் ராமதுரை, உடுமலை வடிவேல், வழக்குரைஞர் உத்திரக்குமார்,
மாணிக்கம், சேரலாதன், தாம்பரம் மாவட்டத் துணைத் தலைவர் விஜய் ஆனந்த், கலைச்செல்வன் மற்றும் அண்ணா பல் கலைக்கழக மாணவர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர்கழக செயலாளர் அருள்செல்வன் நன்றி கூறினார்.
vidutalai,18.10.15