செவ்வாய், 4 செப்டம்பர், 2018
LUNAR ECLIPS 2018
GUIDING DRAVIDIAN STUDENTS IN PROPER PATH!

75 YEAR DRAVIDIAN STUDENTS’ ASSOCIATION
புதன், 18 ஏப்ரல், 2018
மனிதத்தின் நம்பிக்கை நாத்திகம்
மனிதத்தின் நம்பிக்கை நாத்திகம்
ஓங்கி முழங்கிய உலக நாத்திகர் மாநாடு
(5,6,7-01-2018)
-இனியன்
முதல் நாள் நிகழ்ச்சி
திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், விஜயவாடா நாத்திக மய்யம் இணைந்து நடத்திய உலக நாத்திகர் மாநாடு, திருச்சி கே.சாத்தனூர் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் என்.எஸ்.கே. அரங்கத்தில் 5.1.2018 அன்று காலை 9மணியளவில் உலக நாத்திகர் மாநாடு_2018 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் எழுச்சியுடன் தொடங்கியது.
இம்மாநாட்டுக்கு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் வரவேற்புரையாற்றினார். பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் (அமெரிக்கா) டாக்டர் இலக்குவன்தமிழ் தொடக்க உரையாற்றினார். ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடா நாத்திகர் மையத்தின் செயல் இயக்குநர் டாக்டர் கோ.விஜயம் மாநாட்டின் நோக்க உரையாற்றினார்.
புத்தகக் காட்சி திறப்பு:
இந்நிகழ்வில் பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் பன்னாட்டு மனிதநேய மற்றும் நன்னெறி ஒன்றியத்தின் (அய்.இ.எச்.யூ.) ஆலோசனைக்குழு இயக்குநர் எலிசபெத் ஓ’ கேசி புத்தகக் காட்சியைத் திறந்துவைத்தார்.
பகுத்தறிவாளர்களின் படத்திறப்பு:
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்துத்துவ வன்முறைகளுக்குப் பலியான, பகுத்தறிவு, நாத்திகக் கருத்துகளைத் துணிவுடன் பேசியும், எழுதியும் வந்த அறிஞர்களின் நினைவைப் போற்றும் வகையில் டாக்டர் நரேந்திர தபோல்கர், தோழர் கோவிந்த் பன்சாரே, பேராசிரியர் எம்.எம்.கல்புர்கி, பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் ஆகியோரின் படங்களை திராவிடர் கழகத் தலைவரும் பகுத்தறிவாளர் கழகப் புரவலருமான தமிழர் தலைவர் ஆசிரியர் கி.விரமணி அவர்கள் திறந்து வைத்தார்.
புத்தகங்கள் வெளியீடு:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ஆங்கில நூலான Bhagavad
Gita Myth Or Mirage (பகவத் கீதை கற்பனை அல்லது புரட்டு) மற்றும் March of Atheism (நாத்திகத்தை நோக்கிய நடைப்பயணம்) ஆகிய நூல்களுடன், பேராசிரியர் சுரேந்தரா அஜ்நாத் எழுதிய Compilation of ‘Old Testament of Indian Atheism’- இந்திய நாத்திக தொன்மையான கருத்துகளின் தொகுப்பு எனும் ஆங்கில நூல், வரியியல் வல்லுநர் ச.ராசரத்தினம் எழுதிய, Essays of matters which matter (A Rationalist’s Perception) முக்கியத்துவம் மிக்கக் கட்டுரைக் கோவை (ஒரு பகுத்தறிவாளரின் பார்வையில்) ஆங்கில நூல், தந்தை பெரியார் 1928 மற்றும் 1929ஆம் ஆண்டுகளில் வெளியிட்ட ஆங்கில ஏடு ‘ரிவோல்ட்’ இதழ்களின் தொகுப்பு நூலாக Compilation of ‘Revolt’ - Published by Periyar in 1928 & 1929 ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.
பன்னாட்டு மனித நேயம் மற்றும் நன்னெறி ஒன்றியத்தின் லண்டன் தலைமைச் செயல் அலுவலர் கேரே மெக்கலாண்ட், மேனாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை மற்றும் தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.இராசா, மகாராட்டிரா அந்தராஷ்ரதா நிர்மூலன் சமிதி அமைப்பின் செயல் தலைவர் அவினாஷ் பாட்டில், பன்னாட்டு நாத்திகர் கூட்டமைப்பின் சார்பில் (அமெரிக்கா) ரஸ்டம் சிங், திராவிட இயக்க தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவன (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) இணைவேந்தர் ச.ராசரத்தினம் ஆகியோர் தொடக்க விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.
இம்மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பேசுகையில்...
“உலகின் எந்த பகுதியிலும் காணமுடியாத மோசமான கொடுமையாக தீண்டாமை இந்தியாவில்தான் உள்ளது. அதற்குக் காரணம் ஜாதிமுறைதான். ஜாதிமுறை கடவுளின் பெயரால் புகுத்தப் பட்டது. இந்த நாடு நாத்திகத்துக்குரியது. கோயில்களுக்குரியதல்ல. நாத்திகம் என்பது மதத்தை மட்டுமே மறுப்பதல்ல. அதனுடன் தொடர்புடைய அனைத்து வகையிலான மூடநம்பிக்கைகளையும் எதிர்ப்பதாகும்’’ என்றார்.
பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் (அமெரிக்கா) டாக்டர் இலக்குவன்தமிழ் பேசுகையில்...
“இந்தியாவில் ஜாதியை தடை செய்ய வேண்டும். சமூகத்தில் வேதமுறைகள் நீடிக்கும் வரை முன்னேற முடியாது. சுயமரியாதை என்பது எல்லோரையும் ஒன்றிணைத்து பகுத்தறிவைச் சொல்லிக் கொடுப்பதாகும்’’ என்றார்.
மேனாள் மத்தியத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.இராசா பேசுகையில்,
“நாத்திகக் கருத்துகள்தான் திகார் சிறையில் இருந்தபோதும் என்னை மன உறுதியுடன் இருக்கச் செய்தது. பெரும்பாலான மக்களின் கல்விபெற முடியாத நிலைக்கு இந்து மதமும் அது புகுத்திய ஜாதி அமைப்புகளுமே காரணம்’’ என்றார்.
பேரா.சுப.வீரபாண்டியன் பேசுகையில்,
“நாத்திகம் என்பதற்கு அடிப்படை கடவுள் மறுப்புதான். கடவுள் மறுப்புதான் தன்னை மதிப்படையச் செய்யும். கடவுள் மறுப்புதான் ஜாதியை ஒழிக்கும். கடவுள் மறுப்புதான் மூடநம்பிக்கைகளை விரட்டும். நாத்திகம் என்பது எந்த ஆசைக்கும் பலியாகாது _ எந்த அச்சத்திற்கும் உள்ளாகாது. நாத்திகம் என்பது மக்களுக்காக வாழ்வது _ மக்களோடு வாழ்வது _ மக்களிடமிருந்து கற்பது _ மக்களுக்கே தருவது. சமூகம் சார்ந்த வாழ்க்கைதான் நாத்திகர் களுடையது. இல்லாத ஒன்றை கற்பிதம் செய்தல்ல _ இல்லாத ஒன்றுக்கு ஏங்குவதல்ல. வாழும்போதே நெறியுடன் வாழ்வதே நாத்திகம்’’ என்று கூறினார்.
பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வா.நேரு நன்றி கூறினார்.
முதல் அமர்வு:
திருச்சி_பெரியார் மருந்தியல் கல்லூரி அரங்கில் முதல் நாள் 5.1.2018 பிற்பகல் நடைபெற்ற முதல் அமர்வில் மூன்று ஆய்வாளர்கள் ‘மனித குலத்தின் முன்னேற்றத் திற்கானது நாத்திகம்’, ‘மத அடிப்படை வாதத்தின்அச்சுறுத்தல்கள், இன்னல்கள் அதற்கான தீர்வுகள் ‘மருந்தும் நாத்திகமும்’ என்னும் தலைப்புகளில் உரையாற்றினர்.
இரண்டாம் ஆய்வு அமர்வு:
அதே அரங்கில் தொடர்ந்த இரண்டாம் ஆய்வு அமர்வில், மதுரை அமெரிக்கன் கல்லூரி மேனாள் பேராசிரியர் சாம் ஜார்ஜ், ‘நாத்திகம் ஒரு வாழ்க்கை முறை’ எனும் தலைப்பிலும், மலேசிய மாந்தநேய திராவிடர் சங்கத்தினைச் சார்ந்த எம்.கோவிந்தசாமி ‘மலேசியாவில் திராவிடர் இயக்கம்’ என்னும் தலைப்பிலும் தமது ஆய்வு பற்றிய செய்திகளை வழங்கினர்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சி
உலக நாத்திகர் மாநாட்டின் இரண்டாம் நாளான 6.1.2018 அன்று தஞ்சாவூர்_வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் உள்ள அய்ன்ஸ்டீன் அரங்கில் முற்பகல் சிறப்பு அமர்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழர் தலைவர் தலைமை தாங்கினார். பன்னாட்டு மனிதநேய நன்னெறி ஒன்றியத்தின் ஆலோசக இயக்குநர் எலிசபெத் ஓ’ கேசி சிறப்புரை வழங்கினார். பேராசிரியர் முனைவர் எஸ்.தேவதாஸ் வரவேற்புரையாற்றினார்.
ஒடிசா பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவர் தானேஸ்வர் சாகு ‘அறிவியலும் அறிவியல் மனப்பான்மையும் _ ஒரு கண்ணோட்டம்’ என்னும் தலைப்பிலும், கே.ராஜா கென்னடி, ‘சிறார்களிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல்’ எனும் தலைப்பிலும், முனைவர் இ.கி.ராமசாமி, ‘நாத்திக_மனிதநேய இயக்கப் போராளிகள்_ பெரியாரும், கோராவும்’ எனும் தலைப்பிலும், ஆய்வுக் கட்டுரைகள் படித்தனர். பகுத்தறிவாளர் சங்கத்தின் துணைத் தலைவர் வி.கவின்நிலா நன்றி கூறினார்.
6.1.2018 அன்று திருச்சி புத்தூர் பெரியார் மாளிகை வளாகத்தில் மாலை நிகழ்ச்சியாக சிறப்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்புரை _ இணைப்புரை ஆற்றினார். அவர் தன் உரையில், பகுத்தறி வில்லாத மனிதன் மதக் காரியங்களுக்காக வாழ்நாளில் ஏராளமான அளவு காலத்தை வீணடிக்கிறான் என்பதை புள்ளி விவரத்துடன் எடுத்துக்காட்டினார்.
கவிஞர் கனிமொழி எம்.பி. பேசும்போது,
“உலகில் பல மதங்கள் இருக்கின்றன. அவை மனிதனைப் பிரிக்கின்றன. ஆனால், நாத்திகம் தான் மனிதர்களை இணைக்கிறது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தனது ஆசான் _ குரு என்று சொல்லலாம். உலக யுத்தங்களைவிட மனித ரத்தம் சிந்தப்பட்டது மதங்களால்தான். மதச் சண்டைகளால்தானே!
நாம் இத்தகைய மாநாடுகளை நடத்திக் கொண்டே இருக்க வேண்டும். ஆணவக் கொலைகளும், ஜாதி, மத அடிப்படை வாதங்களும் தகர்க்கப்பட மனித நேயத்தையும், பகுத்தறிவையும் மக்களிடம் விதைத்துக் கொண்டே இருப்போம்’’ என்று கேட்டுக் கொண்டதோடு கடவுள் இல்லை என்பதற்கான காரணங்களை ஆய்வு அறிக்கை போல வரிசைப்படுத்திக் கூறினார்.
எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் பேசுகையில்
“பகுத்தறிவுப் பகலவனாகிய தந்தை பெரியார் அவர்கள், கடவுள் மறுப்பாளராய் 95 ஆண்டு காலம் வாழ்ந்தார்கள். ஆனால், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களால் நீண்டகாலம் வாழமுடிவதில்லை. இது நாத்திகத்தின் வெற்றி!
ஆதிக்கத்திற்கும், ஜாதி, மதவாதத்திற்கும் இன்னொரு பெயர்தான் ஆன்மிகம். ஆன்மீகத்தை எதிர்கொள்ளும் ஆற்றல் பெரியாரியலுக்கும் அம்பேத்கர் இயலுக்கும் உண்டு. நாத்திகம் அறிவியல் அடிப்படை யானது. அதுதான் என்றும் வெல்லும்’’ என்று முழங்கினார்.
கேரி மெக்லேலண்ட், செயல் அலுவலர் மனிதநேய நன்னெறி ஒன்றியம் (அய்.எச்.இ.யு) லண்டன் பேசுகையில்,
“நான் சிறுவயதில் கத்தோலிக்க கிறித்துவ மதத்தில் வளர்க்கப்பட்டவன். நாளடைவில் மதத்தின் மீதும் அதன் நடைமுறைகள் மீதும் எனக்கு அவநம்பிக்கை ஏற்பட்டது. பிறகு, அய்.எச்.இ.யு அமைப்பில் என்னை இணைத்துக் கொண்டேன். 1952இல் இவ்வமைப்பு தொடங்கப் பட்டு இப்பொழுது 150 அமைப்புகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. அந்த உறுப்பு அமைப்புகளில் திராவிடர் கழகமும் ஒன்றாகும். சிறப்பாக ஏற்பாடு செய்யப் பட்டுள்ள இம்மாநாட்டில் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைகிறோம்’’ என்று குறிப்பிட்டார்.
நூல் வெளியீடு
மகாராட்டிரத்தைச் சார்ந்த சுதேஷ் கோடே ராவ்(Sudesh Ghode Rao) அவர்களால் எழுதப்பட்ட ‘Crusaders of Rationalism and Humanism’என்ற நூலை மாநாட்டுத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டார்.
படத்திறப்பு:
மத வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட கோவை ஃபாரூக் அவர்களின் உருவப் படத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். அனைவரும் எழுந்து நின்று “வீரவணக்கம், வீரவணக்கம் _ பகுத்தறிவாளர் ஃபாரூக்குக்கு வீரவணக்கம்’’ என்று கைகளை உயர்த்தி முழங்கினர்.
இறுதியாக திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் நன்றி கூறிட இரவு 9.30 மணிக்கு விழா நிறைவுபெற்றது.
மூன்றாம் நாள் நிகழ்ச்சி
உலக நாத்திகர் மாநாட்டின் நினைவாக திருச்சி அருகிலுள்ள சிறுகனூரில்
உலக நாத்திகர் மாநாட்டின் 3ஆவது நாளான 7.1.2018 அன்று திருச்சி_சென்னை நெடுஞ்சாலையிலுள்ள சிறுகனூர் பெரியார் உலகத் திடலில் உலக நாத்திகர் மாநாட்டிற்கு வருகை தந்த பன்னாட்டு பேராளர்கள், “பெரியார் வாழ்க! நாத்திகம் வாழ்க!’’ என பல்வேறு மொழிகளில் கொள்கை முழக்கமிட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் 190 மரக் கன்றுகளை பேராளர்கள் நட்டனர்.
உலக நாத்திகர் மாநாட்டின் மூன்றாம் நாளான 7.1.2018 அன்று மாலை திருச்சி பெரியார் கல்வி வளாகத்தில் நடைபெற்ற ஆய்வு அமர்வில், தமிழ்நாடு திட்டக்குழுவின் மேனாள் துணைத் தலைவர் பேராசிரியர் முனைவர் மு.நாகநாதன் சிறப்புரையாற்றினார்.
‘கல்வியில் திறனாய்வு சிந்தனையும், தடையற்ற தேடலும்’ எனும் தலைப்பில் கோ.ஒளிவண்ணன் அவர்களும், ‘ஆத்திகத்தி லிருந்து நாத்திகத்திற்கு’ எனும் தலைப்பில் கல்வியாளர் சந்திரம்மா மஜீம்தார் அவர்களும், ‘பெரியாரின் பகுத்தறிவாளர் மக்கள் இயக்கம்’ எனும் தலைப்பில் வீ.குமரேசன் அவர்களும், ‘பெரியாரியலின் பொருத்தப்பாடு’ எனும் தலைப்பில் முனைவர் ஒய்.சீனிவாசராவ் அவர்களும் உரையாற்றினர்.
+
நிறைவு விழா
உலக நாத்திகர் மாநாட்டின் நிறைவு நாளில் பிரகடனம் அறிவிக்கப்பட்டது. டாக்டர் ரவிவர்மகுமார், கர்நாடக மேனாள் அட்வகேட் ஜெனரல் சிறப்புரையாற்ற, பன்னாட்டு மனிதநேய நன்னெறி ஒன்றியத்தின் ஆலோசக இயக்குநர் எலிசபெத் ஓ’ கேசி நிறைவுரை வழங்க, மாநாட்டி ன் நிறைவுப் பேருரையை மிக நேர்த்தியான முறையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வழங்க, 2018 ஜனவரி 5, 6, 7 ஆகிய நாட்களில் வெகு சிறப்பாக உலக நாத்திகர் மாநாடு நடந்து முடிந்தது.
-உண்மை இதழ், 16-31.1.18
புதன், 21 பிப்ரவரி, 2018
WORLD ATHEIST CONFERENCE JANUARY 5,6,&7, 2018, TRICHIRAPALLI
DECLARATION
We, the atheists, humanists, rationalists, freethinkers and like-minded people, from India and abroad, gathered here in Trichy, Tamil Nadu, on the eve of the World Atheist Conference 2018, organized by DravidarKazhagam, Atheist Centre and The Rationalists’ Forum on January 5, 6 & 7, 2018.
We have identified that:
• Children and Youth are the majority in the world and there is a need to liberate them from ignorance, illiteracy and superstitions, by educating them in critical thinking and free inquiry so that they develop scientific temper and lead a rational and ethical living
We are deeply concerned:
• We are concerned with the growing intolerance, persecution and violence against atheists, humanists and rationalists
• We are concerned about religious fundamentalists and the youth falling prey to the extremist ideologies
• We are concerned with the superstitious practices and fraudulent ‘god-men’, their impact on the health and well-being of children, women and the society.
We affirm:
• We stand for equality and rights of women, children, and LGBT people, and all have the equal right to life and free from discrimination
• We stand for secularism and free thought
• We voice the need to stop all sorts of atrocities against the socially marginalized communities and women
• We assert that atheists, humanists, rationalists, freethinkers and non-believers have equal rights as with everyone else and the Governments should be cognizant of these
• We stand for the separation of religion and State, religion and politics, religion and education and religion and governance
• We call on the Governments to invest in educating and in fostering rational thinking among youngsters
• We are committed to build atheism and humanism as a way of life, along with critical thinking, scientific temper and spirit of inquiry
• We uphold the human dignity and self-respect of all people
• We believe that ethics is a social necessity and has no religious significance
• Blasphemy laws throughout the world, should be abolished
• The Constitution of India should be amended to abolish caste system which includes ‘untouchability’
We recognize the efforts of atheist, rationalist and humanist social reformers and we will be carrying forward their work for a rational and empathetic society.
Today, on January 7, 2018, this declaration stands as our voice for justice, equality, scientific temper and spirit of inquiry.
- the madern rationalist, 1.2.18
வெள்ளி, 22 செப்டம்பர், 2017
வெளிமாநிலங்களிலும் வெண்தாடி வேந்தரின் பிறந்த நாள் விழாக்கள்!
சென்னை, செப்.21 உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 139 ஆம் ஆண்டு பிறந்த நாள் (17.9.2017) மகாராட்டிரா, கருநாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் கொண்டாடப்பட்டது.
தமிழர்களின் தன்மான உணர்வைத் தட்டி எழுப்பிய உலகத் தலைவர், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 139 ஆம் ஆண்டு பிறந்த நாள் 17.9.2017 அன்று இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விவரம் வருமாறு:
மும்பை
தந்தை பெரியார் அவர்களின் 139 ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா 17.9.2017 அன்று மும்பை திராவிடர் கழகத்தின் சார்பில் தாராவி - கலைஞர் மாளிகையில் மாலை 7.30 மணிக்கு சிறப்புடன் தொடங்கியது.
விழாவுக்கு மும்பை தி.க. தலைவர் பெ.கணேசன் தலைமை வகித்தார். முன்னதாக மும்பை தி.க. செயலாளர் இ.அந்தோணி கடவுள் மறுப்புக் கூறி அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து மும்பை ப.க. தலைவர் அ.இரவிச்சந்திரன் தொடக்கவுரையாற்றி, விழாவை ஒருங்கிணைத்தார்.
அய்யா உருவப் படத்திற்கு விழாவில் கலந்துகொண்ட பெண்கள் அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். விழாத் தலைவர் உரைக்குப் பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாராவி கிளை செயலாளர் ஞான.அய்யாபிள்ளை, சுங்கத் துறை அதிகாரி பொ.அன்பழகன், புறநகர் தி.மு.க. இலக்கிய அணியின் செயலாளர் இரா.வ.தமிழ்நேசன், தமிழ் ஓட்டுநர்கள் சங்கத்தைச் சேர்ந்த இரவிரஜினி, புறநகர் தி.மு.க. பகுத்தறிவு அணி பொறுப்பாளர் நெல்லை பைந்தமிழ், ஜெய்பீம் அறக்கட்டளை நிர்வாகி இராஜாகுட்டி, விழித்தெழுக இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் சிறீதர் தமிழன், ஈஸ்வரி தங்கப்பாண்டியன், மும்பை தி.க. பொருளாளர் அ.கண்ணன், லெமூரியா அறக்கட்டளை சார்பில் மறைந்த பெரியார் பெருந்தொண்டர் சீர்வரிசை சண்முகராசன் நினைவாக வழங்கப்படும் பெரியார் விருது பெற்ற மாணவிகள் அமிசா, அமராவதி ஆகியோர் அய்யாவைப்பற்றி சிறப்பாக உரையாற்றினர்.
தொடர்ந்து மும்பை மாநகரப் பொறுப்பாளர் கருவூர் பழனிச்சாமி, மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் பேராசிரியர் சமீராமீரான், தமிழ் லெமூரியா இதழாசிரியர் சு.குமணராசன் ஆகியோர் தந்தை பெரியாரின் அரிய கருத்துகளை எடுத்துரைத்தனர்.
கழகத் தோழர்கள் செ.ரோபின் நன்றி கூறினார்.
விழாவில், சோ.ஆசைத்தம்பி, சோ.சவுந்திரபாண்டியன், மும்பை கழகத் துணைச் செயலாளர் ஜெ.வில்சன், அ.இராதாகிருட்டிணன், சா.பொன்னம்பலம், அய்.செல் வராஜ், அணுசக்தி நகர் தமிழ் மன்றச் செயலாளர் பு.தேவராசன், இரா.தங்கப்பாண்டியன், மு.கணேசன், கே.இராசன், க.கவுதமன், க.மலர், க.உமா, இரா.சொர்ணம், செல்வி உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். வந்திருந்த அனைவருக்கும் இனிப்பு, சிற்றுண்டி வழங்கப்பட்டது.
தலைமை நிலையத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த அய்யா பிறந்த நாள் சுவரொட்டிகள் மும்பை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டன.
பெங்களூரு
பெங்களூரு பெரியார் மய்யம், தலைவர் கி.வீரமணி அரங்கில் திராவிடர் அகத்தில் 17.9.2017 காலை 10.30 மணியளவில் அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் 139 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவும், தமிழகத்தின் விடிவெள்ளி அறிஞர் அண்ணாவின் 109 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவும் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.
மாநில செயலாளர் இரா.முல்லைக்கோ கழகத் தோழர்கள் அனைவரையும் வரவேற்றும், இணைப்புரையும் ஆற்றினார். கருநாடக மாநிலத் தலைவர் மு.சானகிராமன் தலைமையேற்று உரை நிகழ்த்தினார்.
எழுச்சிமிகு கழகக் கொடியை பெரியார் நகர் பகுதி தலைவர் பெ.பாண்டியன் பலத்த கரவொலிக்கிடையே உயர்த்தி வைத்தார். தந்தை பெரியார் படத்தினை ஓசூர் சி.தேவனும், அறிஞர் அண்ணாவின் படத்தினை கவிஞர் வீ.இரத்தினாவும் திறந்து வைத்தனர்.
மறைந்த மாணவி அனிதாவின் படத்தினை பொதுக்குழு உறுப்பினர் இரா.இராசாராமும், மறைந்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் அவர்களின் படத்தினை ஆ.வந்தியத்தேவனும் திறந்து வைத்தனர்.
மறைவெய்திய அனிதா, இதழாளர் கவுரி லங்கேஷ், வழக்குரைஞர் பிரிவு செயலாளர் ஜெ.அருண்கதிரவனின் சிறிய மாமியார் வரலட்சுமி ஆகியோர்களுக்கு இரு நிமிடங்கள் அனைவரும் எழுந்து நின்று அமைதி மரியாதை செலுத்தினர்.
தோழர் நரசிம்மமூர்த்தி, ஆ.வந்தியத்தேவன் ஆகி யோருக்கு தங்கம் இராமச்சந்திரா அறக்கட்டளையின் சார்பில் பயனாடைகளையும், பரிசுப் பொருள்களையும் வழங்கி மகிழ்வுபடுத்தினர்.
பெரியார் பிஞ்சு இராவணன் உள்ளிட்ட மழலை யர்களுக்குப் பேனா வழங்கப்பட்டது. அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
தந்தை பெரியார் பேசிய பேச்சினை 1984 இல் திராவிடர் கழகம் வெளியிட்ட நூலினை ஆதாரமாகக் கொண்டு நீட் தேர்வினை எதிர்த்து பெரியாரின் முதுபெரும் தொண்டர் முத்துசெல்வன் நெடிய உரையாற்றினார்.
இறுதியாக, மறுமலர்ச்சி தி.மு.க. வெளியீட்டு செய லாளர் ஆ.வந்தியத்தேவனுக்கு, மாநில தி.க. தலைவர் மு.சானகிராமன் பயனாடை அணிவித்து சிறப்பு செய்து உரையாற்ற அழைத்தார். சுமார் ஒன்றரை மணிநேரம் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, மறைந்த அனிதா, பகுத்தறிவு நெறி இதழாளர் கவுரி லங்கேஷ் ஆகியோரைப்பற்றி நெடியதொரு உரை நிகழ்த்தினார்.
மாநில துணைச் செயலாளர் வே.நடராசன் எழுச்சிமிக்க நன்றியுரை நிகழ்த்தினார்.
மூத்த உறுப்பினர் வாசுதேவன் பகுத்தறிவு நூல்களை அனைவருக்கும் வழங்கினார்.
இறுதியாக, பெரியாரின் பிறந்த நாளினை மகிழ்வுடன் நினைவுகூறும் வண்ணம் மாநில துணைத் தலைவர் பு.ர.கஜபதி - செயலட்சுமி இணையர் வந்திருந்த அனை வருக்கும் புலால் உணவு வழங்கி சிறப்பித்தனர். முத்துமணி, வினோத் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள், மகளிர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கேரளா
கேரள மாநிலம் சேர்தலா அருகிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில், பணிபுரியும் பொறியாளர்கள் இரா.சு.பாஸ்கர், மனோரஞ்சித், மணிகண்டன், சிலம்பரசன், ரஞ்சித் ஆகியோர் 17.9.2017 அன்று வைக்கம் தந்தை பெரியார் நினைவகம் சென்று, அய்யாவின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்வு முடிந்ததும், கலந்துகொண்ட நண்பர்களுக்கு அசைவ விருந்து அளித்து தந்தை பெரியாரின் 139 ஆம் ஆண்டு பிறந்த நாள் நிகழ்வு இனிதே கொண்டாடப்பட்டது...
-விடுதலை,21.9.17

